Chennai Kapaleeswarar Temple Recruitment 2025: சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவிலில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்தத் திருக்கோவிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
| கருடா TNPSC Academy Group 2 & 4 Online Class New Batch தொடங்க உள்ளது. வகுப்பில் இணைய தொடர்புக்கு - 9787968176 |
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
சென்னை போன்ற பெருநகரங்களில் அரசுத் துறையில் அதுவும் கோவில் நிர்வாகத்தில் வேலை கிடைப்பது என்பது அரிதான விஷயமாகும். இந்த வேலைவாய்ப்பிற்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் இன்ஜினியரிங் முடித்தவர்கள் வரை மற்றும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரங்கள் மற்றும் சம்பளம்
கோவில் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்துவதற்காகப் பல்வேறு நிலைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் உயர் பதவியான உதவிப் பொறியாளர் (Assistant Engineer) பணிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை சம்பளம் வழங்கப்படும். அலுவலகப் பணிகளான இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணிக்கு 2 இடங்களும், சீட்டு விற்பனையாளர் பணிக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை சம்பளம் கிடைக்கும்.
மேலும் தமிழ் புலவர் பணிக்கு ஒரு இடமும், உதவி மின் பணியாளர் பணிக்கு 2 இடங்களும் உள்ளன. இதுதவிர மிகவும் எளிய பணிகளான பாரா பணிக்கு 6 இடங்களும், காவலர் பணிக்கு ஒரு இடமும், உதவி பரிசாரகர் பணிக்கு 2 இடங்களும், அர்ச்சகர் பணிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு மாதம் 10,000 ரூபாய்க்கு மேல் ஆரம்ப சம்பளம் கிடைக்கும்.
கல்வித் தகுதி விவரங்கள்
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உதவிப் பொறியாளர் பணிக்கு சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering) முடித்திருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. சீட்டு விற்பனையாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு (Typewriting) தெரிந்திருக்க வேண்டும். தமிழ் புலவர் பணிக்குத் தமிழில் பி.லிட் அல்லது பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவி மின் பணியாளர் பணிக்கு ஐடிஐ (ITI) முடித்து மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பாரா, காவலர் மற்றும் உதவி பரிசாரகர் போன்ற பணிகளுக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலே போதுமானது.
எனவே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கும் இங்கு வேலை காத்திருக்கிறது. விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்பது மிக முக்கிய நிபந்தனையாகும்.
வயது வரம்பு மற்றும் தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இது அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவானது. இந்த வேலைவாய்ப்பிற்கு எவ்விதமான எழுத்துத் தேர்வும் கிடையாது. தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பம் உள்ளவர்கள் கோவில் இணையதளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும்.
மிக முக்கியமாக 75 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுய விலாசமிட்ட உறை ஒன்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். இது நேர்காணல் அழைப்பு கடிதம் அனுப்புவதற்காகப் பயன்படுத்தப்படும்.

விண்ணப்பங்களை இணை ஆணையர் அல்லது செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை 04 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி தேதி 28.12.2025 ஆகும். சென்னைவாசிகள் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.
Official Notification:
Apply Link:
For More Job Info:





